வில்சன் சைலஸ்
சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துச் சொல்ல மீண்டும் வந்துவிட்டது தமிழ்மொழி விழா. தமிழ்ப் பற்றை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த பத்து ஆண்டு களாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் தமிழ்மொழி விழா, உள் ளூர், வெளியூர்களிலிருந்து புதி தாக இவ்வாண்டு நிகழ்ச்சிகள் படைக்கவுள்ள குழுக்களின் மூலம் மேலும் களைக்கட்ட இருக்கிறது. சிங்கப்பூரர்களைப் பிரதான மாகக் கருத்தில்கொண்டு நிகழ்த் தப்பட்டாலும் உலகளவில் உள்ள இதர தமிழர்களின் கவனத்தை தமிழ்மொழி விழா ஈர்த்துள்ளது பெருமிதம் அளிக்கிறது என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலை வர் திரு ஆர் ராஜாராம். "தமிழர்களும் மொழி ஆர் வலர்களும் ஒன்றுகூடும் தளமாக விழா அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்ற அவர், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கொண்டாட்டங்களைப் பொதுமக்கள் இந்த ஆண்டும் எதிர்பார்க்கலாம் எனக் கூறினார்.