நயன்தாரா நடிப்பில் உருவாகி யுள்ள 'டோரா' படத்துக்காக தணிக்கை குழுவை விமர்சித் துள்ளார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் கொடுத் துள்ளது. திகில் காட்சிகள் அதி கம் உள்ளதால் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளதாக தணிக்கைக் குழுவினர் விளக்கம் அளித் துள்ளனர். இந்நிலையில், 'டோரா' படத் திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்த தற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தணிக்கைக் குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தற்போது 'டோரா' படத்திற்கு 'ஏ' சான்றிதழ். 'துருவங்கள் பதி னாறு', 'மாநகரம்' படங்களுக்கு 'யுஏ' சான்றிதழ். ஆனால், அண்மையில் வெளிவந்த சில படங்களுக்கு மட்டும் 'யு' சான்றிதழ். "தணிக்கைக் குழு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது," என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
'டோரா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் நயன்தாரா