பிரான்சில் 35 பேர் கைது

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரு சீனர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் ஆசிய சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு போலிஸ் நிலையத்திற்கு வெளியே திங்கட்கிழமை இரவு சுமார் 150 பேர் ஒன்றுகூடியதாக போலிசார் கூறினர். அந்த ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலிஸ் அதிகாரிகள் மூவர் காயம் அடைந்ததாகவும் போலிஸ் வாகனம் ஒன்று சேதம் அடைந்ததாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முன்னதாக பாரிஸில் 56 வயது சீனர் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கூர்மையான ஆயுதத்தால் போலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் இதனால் அவரை போலிசார் சுட்டுக் கொன்றதாகவும் போலிசார் கூறினர். போலிசார் கூறுவதை அந்த சீனரின் குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!