யாஸ்மின் பேகம்
கணவரின் வன்முறையால் பாதிக் கப்பட்ட மனைவிக்கு முனைவர் சுதா நாயர் 'அங் மோ கியோ குடும்ப சேவை மையத்தில்' ஆலோசனை, ஆதரவு ஆகிய வற்றை அளித்து வந்த காலகட்டம் அது.
வீட்டில் எந்தவிதப் பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடி உதவிக்கு '999' எனும் எண்ணை அழைத்து போலிசாருக்குத் தெரிவிக்கும்படி குடும்ப வன்முறையால் பாதிக் கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் பிள்ளைகளிடம் சுதா அறிவுரை கூறியிருந்தார்.
மற்றவருக்கு உதவும் மனப் பான்மை கொண்ட சுதாவின் வாழ்வில் இந்த அறிவுரை ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என அன்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் 1999ஆம் ஆண்டில் சுதாவுக்கு ஒரு 'வாய்ஸ்மெயில்' கிடைத்தது. அதில் தமது தந்தை, அம்மாவை மிகவும் மூர்க்கத் தனமாக அடிப்பதாக அந்தச் சிறுவன் தெரிவித்திருந்தான்.
சமுதாயத்தில் வன்முறையைக் களையும் போராட்டத்தில் முனைவர் சுதா நாயர். படம்: திமத்தி டேவிட்