ஆங் சான் சூச்சியின் அரசாங்கம் எதிர்நோக்கும் முதல் சோதனை

யங்கூன்: மியன்மாரில் நேற்று இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் அரசாங்கம் எதிர் நோக்கும் முதல் சோதனை இது என்று கூறப்படுகிறது. ஐம்பது ஆண்டு கால ராணுவ ஆட்சிக்குப் பிறகு ஆங் சான் சூச்சியின் கட்சி அங்கு நடந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு காலத்தில் ஆங் சான் சூச்சி மக்களுக்கு என்ன செய்தார்? அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நேற்று ஏராளமான மக்கள் வாக்களித்தபோதிலும் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மக்களிடம் காணப்பட்ட உற்சாகம் இந்தத் தேர்தலில் காணப்பட வில்லை. இதனால் ஆளும் கட்சி இந்த முறை அதிக வாக்குகளைப் பெற முடியாது என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!