ஆஸ்திரேலியாவில் வெள்ளம்: இருவர் மரணம், பலர் தவிப்பு

சிட்னி: கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை டெப்பி எனும் சக்திவாய்ந்த புயல் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங் கள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளநீரில் அடித்துச் செல்லப் பட்ட இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர். வெள்ள நீரில் சிலர் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் வேளையில் நான்கு பேரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் அறிவித் துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ்லாந்து ஆகிய இரு மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளநீர் பல வீடுகளை சூழ்ந்துள்ளதால் ஆயிரக் கணக்கான மக்கள் தவிக்க நேர்ந் துள்ளது. மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 100,000 வீடுகள் இருளில் மூழ்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!