சுதாஸகி ராமன்
சிங்கப்பூரின் வளரும் தலை முறையும் தமிழ்மொழி பேசி அதன் சிறப்புகளை வளர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் நம்பிக்கை தெரி வித்துள்ளார். தமிழ்மொழி விழாவை நேற்று மாலை மீடியாகார்ப் வளாகத்தின் எம்ஈஎஸ் அரங்கில் தொடங்கி வைத்த அவர், தமிழ் மொழியை வாழும் மொழியாக வைப்பதற்கு தமிழ்ச் சமுதாயத்தின் முயற்சி கள் எடுத்துக்காட்டுகளாக உள் ளன என்றார். இந்த விழாவிற்காக ஒன் றாக இணைந்து செயல்படும் 45 அமைப்புகளுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்த திரு விக்ரம் நாயர், இப்போது எடுக்கப்பட்டு வரும் முயற்சி களால் நமது அடுத்த தலைமுறை யினரும் தமிழில் பேசுவார்கள் என்று உறுதிமேலிடக் குறிப்பிட் டார். வளர்தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, வசந்தம் ஒளிவழி ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
தமிழ்மொழி விழாவை தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் நேற்று மாலை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். அவருக்கு அருகில் வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு ஆர்.ராஜாராம் (இடம்) மீடியாகார்ப்பின் தமிழ், மலாய் சமூகப் பிரிவின் தலைவர் டாக்டர் சித்ரா ராஜாராம் மற்றும் சமூகத் தலைவர்கள். படம்: வளர்தமிழ் இயக்கம்