மயாமி: மயாமி பொதுவிருது அனைத்துலக டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகன்னா கோன்டா. இறுதிப் போட்டியில் 12ம் நிலை வீராங்கனையான டென் மார்க்கின் வோஸ்னாக்கியை 10ம் நிலை வீராங்கனை ஜோகன்னா கோன்டா சந்தித்தார். அப்போது 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வோஸ்னாக் கியை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஜோகன்னா. இதன் மூலம் 40 ஆண்டு களுக்குப் பிறகு, டென்னிஸ் பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். மேலும் 25 வயதான கோன்டா உலக தரவரிசையில் 7வது இடத்திற்கும் முன்னேறி உள்ளார். கடந்த 1977ஆம் ஆண்டு இங்கிலாந்து வீராங்னை வெர்ஜினா வேட் 'விம்பிள்டன்' பட்டத்தைக் கைப்பற்றியிருந்தார்.
மயாமி பொதுவிருது வெற்றிக் கிண்ணத்தோடு இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா கோன்டா. படம்: ஏஎஃப்பி