சுகாதாரப் பராமரிப்புத் தொழில் துறையில் கிடைக்கும் வேலை களுக்கு மாறிக்கொள்ள விரும்பு வோருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவிருக்கின்றன. இந்தத் தொழில்துறை, அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 9,000 பேரை வேலையில் சேர்க்கலாம் என்று நம்புகிறது. வாழ்க்கைத்தொழிலில் பாதி யில் வேறு தொழில்துறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும் பிய சுமார் 700 ஊழியர்கள் சென்ற ஆண்டில் சுகாதாரப் பரா மரிப்புத் துறையில் வேலைகளைப் பெற்றனர்.
நடுவில் வேறு துறைகளுக்கு மாறிக்கொள்ளும் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோ ருக்கு உதவுவதற்காக மனித வள அமைச்சு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டு வேலை பெற்ற 700 பேரில் அந்தத் திட்டங்களின் மூலம் சுமார் 300 பேருக்கு வேலை கிடைத்தது. இதர 400 பேர் வேலைச் சந்தை கள் மூலம் பதவிகளில் நியமிக்கப் பட்டனர். சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று நாடாளு மன்றத்தில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே.தனலட்சுமிக்குப் பதிலளித்துப் பேசினார்.