சிங்கப்பூரை நிறுவியவர்களின் கொள்கைகளையும் கோட்பாடு களையும் நினைவூட்டும் நினை விடம் எப்படித் திகழவேண்டும் என்பதை மக்களே தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறது 'வாட்டர்வியூ' கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காட்சி. 'பே ஈஸ்ட்' தோட்டத்தில் நினைவிடம் உருவாக்கப்பட்டால் எத்தகைய அனுபவத்தைப் பெற லாம் என்பதை மக்கள் அறிந்து கொள்ள கரையோரப் பூந்தோட்டங் களின் 'வாட்டர்வியூ' கூடத்தில் இம்மாதம் 13ஆம் தேதி இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கண்காட்சிக்கு தமிழ் விளக்கங்களுடன் கூடிய ஒரு பிரத்தியேக சுற்றுலாவுக்குத் தமிழ் முரசு ஏற்பாடு செய்திருக்கிறது. எதிர்காலத்தில் நிறுவப்பட இருக்கும் நினைவிடம் எப்படி இருக்கவேண்டும், எத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக் கும் முடிவு இப்போது பொது மக்களின் கைகளில் உள்ளது.
கரையோரப் பூந்தோட்டங்களில் இடம்பெற்று வரும் கண்காட்சியின் ஓர் அங்கம். படம்: திமத்தி டேவிட்