கிறிஸ்துவர்கள், யூதர்கள் ஆகி யோர் தொடர்பிலான சர்ச்சைக் குரிய கருத்துகளைத் தெரிவித் தமைக்காக 4,000 வெள்ளி அபரா தம் விதிக்கப்பட்ட இஸ்லாமிய சமய போதகரான இமாம் நல்லா முகம்மது அப்துல் ஜமீல், 46, சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்தை நேற்றுக் காலை சந்தித்தார். பாஅல்வி பள்ளிவாசலின் இமாம் ஹபிப் ஹசன் அல்=அட்டாஸ் ஏற் பாடு செய்திருந்த காலைச் சிற் றுண்டியில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இமாம் நல்லா முகம்மதுவைச் சந் திக்குமாறு அமைச்சருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். "இமாம் ஹசன் விடுத்த அழைப்பை ஏற்று இமாம் நல்லா முகம்மதுவைச் சந்தித்து அவரு டன் காலைச் சிற்றுண்டியில் கலந்து கொண்டேன்," என்று அமைச்சர் சண்முகம் ஊடகங்களிடம் தெரி வித்தார்.
பாஅல்வி பள்ளிவாசலில் நேற்றைய காலைச் சிற்றுண்டியின்போது சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத் துடன் இமாம் நல்லா முகம்மது (அமைச்சரின் வலப்பக்கத்தில்) மற்றும் சமய, சமூகத் தலைவர்கள். படம்: பாஅல்வி பள்ளிவாசல்