வடகொரியாவுக்கு பதிலடியாக தென்கொரியா ஏவுகணை சோதனை

சோல்: தென்கொரியாவை அடிக்கடி அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அடுத்தடுத்து நெடுந் தொலைவு ஏவுகணைகளை சோதனை செய்து வரும் வேளை யில் அதற்கு பதிலடியாக தென் கொரியா நவீன ஏவுகணையை சோதனை செய்துள்ளது. 800 கி.மீ. தொலைவு வரை சென்று வடகொரியாவின் எந்த பகுதியையும் தாக்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த நவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்திருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது. வடகொரியா அதன் நவீன ஏவுகணையை ஜப்பானிய கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்த மறுநாள் தென்கொரியா இந்த சோதனையை மேற்கொண் டுள்ளது. ஐநாவின் பொருளியல் தடை மற்றும் உலக நாடுகளின் கண்டனம் ஆகியவற்றை பொருட் படுத்தாமல் வடகொரியா மேற் கொண்டு வரும் ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!