முருகக் கடவுளுக்காகக் கொண்டாப்படும் பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் யீஷூன் தொழிற்பூங்கா 'ஏ'யில் அமைந்துள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்குப் பால் குடம், பால் காவடிகளுடன் தொடங்கும் பங் குனி உத்திர விழாவில் இவ் வாண்டு கிட்டத்தட்ட 10,000 முதல் 12,000 பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் புதுப்பிப்புப் பணிகளுக்கு இடையே பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்றார் ஆலயத்தின் கௌரவச் செயலாளர் திரு அண்ணாதுரை அழகப்பன்.
கடந்த ஆண்டு நடந்த பங்குனி உத்திர திருவிழாவின்போது காவடி சுமந்து வந்த பக்தர். படம்: திமத்தி டேவிட்