தென் தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள்

பேங்காக்: தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் தேர்தல் நடத்துவதற்கும் வழிவகுக்கும் புதிய அரசிய லமைப்புச் சட்ட ஆவணத்தில் அந்நாட்டு மன்னர் மகா வஜிரலாங்கோன் கையெழுத் திட்டதை அடுத்துத் தென் தாய்லாந்தில் நேற்று தொடர் தாக்குதல்கள் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப் பட்ட 23 தாக்குதல்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்களும் அடங்கும். இத்தாக்குதல்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று போலிசார் கூறினர். குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரிவினைவாதிகள் அல்லது போராளிகள் நடத்திய தாக்குதல்கள் அவை என்று வட்டார பாதுகாப்புப் படை பேச்சாளர் ஒருவர் கூறினார். இத்தாக்குதல்களுக்கு இது வரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இத் தாக்குதல்களுக்குக் காரணமான தீவிரவாதக் குழுவை தங்களால் அடையாளம் காண முடியவில்லை என்று பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!