அனன்யா ரவிச்சந்திரன்
சிங்கப்பூரில் முதல் முறையாக சிறப்புத் தேவை உள்ள இளையர் களுக்கு ஆடை விற்பனைத் துறை யில் கைகொடுக்க, 'யூனிக்ளோ' கடையும் சிறப்புத் தேவையுடை யோருக்கான டெல்டா பள்ளியும் கைக் கோர்த்துள்ளன. டெல்டா பள்ளியின் சிறப்பு தேவையுள்ள 64 மாணவர்களுக்கு ஆடை விற்பனையில் திறன்களை வளர்க்கும் வகையில் இவ்வாண்டு ஜனவரியில் அங்கு மாதிரி 'யூனிக்ளோ' கடை உருவாக்கப்பட் டுள்ளது. மாணவர்கள் நடைமுறை யில் எதிர்கொள்ளும் சவால்கள் வகுப்பறைச் சூழலிலேயே அறிந்து கொள்ள இக்கடை உதவுகிறது.
இவர்களின் கற்றல் வேகம் சற்று மெதுவாக இருப்பதால் இந்த அனுபவம், பின்னர் வேலைச் சூழலில் சக தொழிலாளர்களுக்கு இணையாகச் செயல்பட உதவுகி றது. அத்துடன் பணத்தை எவ் வாறு சிக்கனமாக செலவு செய்வது என்பதையும் கற்கிறார்கள்.