ஐரோப்பிய நிதியுதவியை ஏற்க மறுக்கும் பிலிப்பீன்ஸ்

மணிலா: ஐரோப்பிய ஒன்றியத்தின் மேம்பாட்டு நிதியை ஏற்கப் போவதில்லை என்று பிலிப்பீன்ஸ் அரசு கூறியுள்ளது. பிலிப்பீன்ஸ் அதிபர் டுடர்ட்டே யின் போதைப்பொருளுக்கு எதி ரான சர்ச்சைக்குரிய நடவடிக்கை களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்ததையடுத்து பிலிப்பீன்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் வழங்க இருந்த 250 மில்லியன் யூரோ நிதியுதவியை நிராகரித்துள்ள பிலிப்பீன்ஸ் அரசு இதன் மூலம் தங்களது உள்நாட்டு விவகாரங் களில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக போர்க்களமாக இருக்கும் தெற்கு பிலிப்பீன்ஸ் கலகக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியம், இந்த மேம்பாட்டு நிதியுதவியை வழங்கவிருந்தது. டுடர்ட்டே பிலிப்பீன்ஸின் அதி பராக பதவியேற்ற பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சுமார் 2,700 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!