ஆக்ரா: பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை நல்ல விதத்தில் ஆளாக்க விரும்பிய தாய் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்க முன்வந்துள்ளார். தாய் ஆர்த்தி சர்மாவுக்கு நான்கு பிள்ளைகள். இதில் மூன்று பெண் குழந்தைகள். அனைவரும் பள்ளியில் படிக்கிறார்கள். தனது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு நிதி உதவி எதுவும் கிடைக்காத காரணத்தால் தனது சிறுநீரகத்தை ஃபேஸ்புக் பக்கத் தில் விற்பனை செய்ய உள்ள தாகப் பதிவிட்டுள்ளார். குவாலியர் சாலையில் உள்ள ரோஹாடாவில் உள்ள ஈகோ காலணியில் வாடகை வீட்டில் எட்டு குடும்ப உறுப்பினர்களுடன் இவர் வசித்து வருகிறார். கையால் எழுதப்பட்ட கடிதத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆர்த்தி பதிவிட்டுள்ளார். தனது சிறுநீரகத்தை யாரேனும் வாங்கிக் கொண்டால்தான் தனது குழந்தை களால் படிப்பைத் தொடரமுடியும் எனவும் பிள்ளைகளின் படிப்புக் காக உதவி கேட்டு கெஞ்சியுள்ளார். தனது கணவர் மனோஜ் சர்மா உதவியுடன் சிறிய துணிக்கடையை நடத்திவந்தார் ஆர்த்தி சர்மா. ஆடைத் தொழிலில் கிடைத்து வந்த வருமானம் மூலம் குழந்தை களை படிக்க வைத்து வந்தார். கடந்த சில மாதங்களாக தொழில் நலிவடைந்துவிட்டதால் வருமானத் துக்கு வழியில்லாமல் திண்டாடினார்.
நான்கு குழந்தைகளைப் படிக்கவைக்க ஃபேஸ்புக்கில் சிறுநீரகத்தை விற்கும் தாய்
2 Jun 2017 06:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Jun 2017 08:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!