இயற்கைவள சுற்றுலா மையத்தின் சுற்றுவட்டாரக் காடுகளில் வாழும் வனவிலங்குகள் மீதான பாதிப் பைக் குறைக்க 2019 கடைசிக் குள் தரையிலிருந்து 9 மீட்டர் உய ரத்தில் புதிய வனவிலங்கு பாலம் கட்டப்படும். 'மண்டாய் இக்கோ=லிங்க்' என்றழைக்கப்படும் புதிய பாலம் 110 மீட்டர் நீளமும் 44 மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். மண் டாய் லேக் சாலையின் குறுக்கே பாலத்தில் செல்லும் வனவிலங்கு களுக்கு உணவும் நிழலும் தர பாலத்தில் மரங்கள் இருக்கும். காடுகளை இருப்பிடமாகக் கொண்ட வனவிலங்குகள் மீதான பாதிப்பைக் குறைக்க குத்தகை யாளர்களுக்கு உயிரினப் பன்மயம் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சியை மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ் நடத்தும். சிங்கப்பூர் காடுகளில் வாழும் ஸ்ட்ரா ஹெடட் புல்புல் பறவை, நல்லபாம்பு, லெஸ்ஸர் மவுஸ்டியர் போன்ற விலங்குகளைப் பற்றியும், சுற்றுலா மையத்தை அமைக்கும் பணியின்போது விலங்குகளைக் காண நேரிட்டால் என்ன செய்வது என்பது பற்றியும் குத்தகையாளர் கள் கற்றுக்கொள்வார்கள். நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ் இவ் விவரங்களை வெளியிட்டது.
சுற்றுச்சூழல் பாலம் இப்படி இருக்கும் என்பதைக் காட்டும் வரைபடம். படம்: மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ்