$150,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கின; 6 பேர் கைது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது. அதில் $150,000 மதிப்புள்ள 2.1 கிலோ ஹெராயின், எரிமின்=5, ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் சிக்கின. சந்தேகத்தின் பேரில் 42 வயது ஆடவர் ஒருவர் கண்காணிக்கப்பட்டார். அப்போது அவர் இன்னொரு 35 வயது ஆடவர் ஒருவரை தனது வாகனத் தில் ஏற்றிக்கொண்டு சாங்கி பகுதியில் உள்ள ஒரு கார் பேட்டைக்குச் சென்றார். அந்த 35 வயது ஆடவர் அப்பகுதி யில் உள்ள காப்பிக் கடை ஒன்றில் இரண்டு மலேசியர்க ளைச் சந்தித்துச் சென்றார். சற்று நேரம் கழித்து கையில் ஒரு பையுடன் அங்கு அந்த ஆடவர் வந்தார்.
சந்தே கத்தின்பேரில் அவரைப் பிடித்து அவரது பையைச் சோதித்ததில், அந்தப் பையில் சுமார் 1,360 கிராம் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சாங்கி ரோட்டில் ஒரு வீட்டில் ஒளிந்திருந்த 42 வயது ஆடவர் ஒருவரும் 61 வயது சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 280 கிராம் ஹெராயினும் 16 கிராம் ஐஸ் என்னும் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டன. இன்னொரு சம்பவத் தில் உட்லண்ட்ஸ் கிரசெண்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 30 கிராம் ஹெராயினும் மூன்று எரிமின்=5 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.