வேலையிட மரணம் பாதியாகக் குறைவு

வேலையிடங்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல்பாதியில் வெகுவாகக் குறைந்திருக்கிறது. முதல் ஆறு மாதங்களில் வேலையிடங்களில் 19 பேர் உயி ரிழந்தனர். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் நேர்ந்த 42 மர ணங்களைவிட இது குறைவு என மனிதவள அமைச்சும் வேலை யிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழ கமும் நேற்று வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. உயிரிழந்த 19 பேரில் ஐவர் உற்பத்தித் துறையில் வேலை செய்தவர்கள். கட்டுமானத் தளங் களில் இருவர் உயிரிழந்தனர்.

வேலையிட மரணங்களுக்கான இரு முக்கிய காரணங்கள் போக்கு வரத்து விபத்துகளும் உயரத்திலி ருந்து கீழே விழுவதும் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டின் முதல் பாதியில் ஏழு தொழிலாளர்கள் போக்கு வரத்து விபத்துகளில் உயிரிழந்த னர். சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் பத்துப் பேர் போக்கு வரத்து விபத்துகளில் உயிரிழந் தனர். இவ்வாண்டின் முதல் பாதியில் நால்வர் கீழே விழுந்து அல்லது வழுக்கி விழுந்து உயிரி ழந்தனர். சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் இந்தக் காரணங் களால் 16 தொழிலாளர்கள் உயிரி ழந்தனர். இவ்வாண்டு இதுவரை இரு தொழிலாளர்கள் நெருப்பிலும் வெடிப்புகளிலும் மாண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!