உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரு சிங்கப்பூரர்கள் கைது

தீவிரவாதம் தொடர்பான நட வடிக்கைகளில் ஈடுபட்டதற்காக உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் உள் துறை அமைச்சு தெரிவித்தது. தளவாட நிறுவனத்தின் நிர் வாக இயக்குநரான இம்ரான் காசிம், வயது 34, நிர்வாக உதவி யாளர் ஷகிரா பேகம் அப்துல் வஹாப், வயது 23 ஆகிய இருவரும் இவ்வாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டதாக அது கூறி யது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து வெளிநாடு களில் ஆயுதங்களுடன் வன் முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்தில் இருந்ததற்காக இம்ரான், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். அதே சமயத்தில் வெளிநாடு களில் செயல்படும் பயங்கரவாத போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டதற்காக ஷகிராவுக்கு கட்டுப் பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்ரானின் பயங்கரவாதத் தொடர்பு 2014ல் தொடங்கியது என்று உள்துறை அமைச்சு குறிப் பிட்டது. அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அகதிகள் முகாமில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை மேற்பார்வையிடுவதற் காக அவர் சிரியாவுக்குச் சென்றார். அவரது தளவாட நிறு வனம்தான் முகாம் விநியோகிப் புக்கு ஏற்பாடு செய்திருந்தது. முகாமில் இருந்தபோது ஏற்பாடு செய்தவர்களிடமிருந்து நழுவி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர அவர் முயற்சி செய்தார். ஆனால் அவரது அந்த முயற்சி பலிக்க வில்லை. அதே ஆண்டு ஜூலையில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல்-பக்டாடியுடன் சேரவும் இம்ரான் உறுதிபூண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!