வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் கடிதப்பெட்டியில் சிக்கிக் கொண்ட ஒரு பூனையை 'சிங் போஸ்ட்' நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மீட்டார். திருவாட்டி ஹாசிம், 22, என்ற மாது வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணிக்கு தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது கடிதப் பெட்டியிலிருந்து 'மியாவ்' என்ற சத்தம் வந்ததைக் கேட்டார். பெட்டி யின் மூடியை அசைத்து பார்த்த போது வெளியே கையை நீட்டியபடி கருப்புப் பூனை ஒன்று உதவிக்கு குரல் கொடுத்தது. புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8ல் இருக்கும் 169வது புளோக்கின் கடிதப்பெட்டி உள்ளே பூனை மாட்டிக்கொண்டது.
அந்தப் பெட்டியின் உரிமையாளரிடம் கடிதப் பெட்டியின் சாவி இல்லை. ஆகையால் திருவாட்டி ஹாசிம் சிங்போஸ்ட் நிறுவனத் துடன் தொடர்புகொண்டார். உடனடியாக பிற்பகல் 1.30 மணிக்கு சிங்போஸ்ட் அதிகாரி ஒருவர் வந்து கடிதப்பெட்டியைத் திறந்து பூனையை வெளியே கொண்டுவந்தார். பூனைக்கு காயம் எதுவும் இல்லை என்று திருவாட்டி ஹாசிம் கூறினார். இதற்கிடையே வேண்டும் என்றே யாராவது இப்படி செய்து இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அதிகாரிகளுடன் சேர்ந்து பூனை நல்வாழ்வு சங்கம் செயல்படும் என்று இந்தச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் லாரா அன் மிராண்டா தெரி வித்தார்.