டாக்கா: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சென்ற மாதம் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து ரோஹிங் யா முஸ்லிம்கள் 370,000 பேர் தப்பியோடி பங்ளாதேஷிற்குள் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரி வித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அவ்வாறு தப்பியோடி வரும் ரோஹிங்ய முஸ்லிம்கள் பல துயரங்களை அனுபவித்து வரு வது தெரியவந்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்யா போராளிகளுக்கு எதிராக மியன்மார் ராணுவம் கடும் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் உயிருக்குப் பயந்து ரோஹிங்யா மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.
அவ்வாறு தப்பிச் செல்லும் அகதிகள் எல்லையில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கண்ணி வெடிகளில் சிக்கி அவதியுற நேரிடுகிறது. கண்ணி வெடியில் சிக்கிய பலர் கை, கால்களை இழந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பிவந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் இவ்வாறு கூறியதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பங்ளாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்யா அகதிகளை சமாளிப் பதில் சிரமத்தை எதிர்நோக்கும் அந்நாடு, ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு தீவுக்கு அகதிகள் இடம் பெயர அனைத்துலக நாடு களின் ஆதரவை நாடியுள்ளது. மியன்மாரில் நீடிக்கும் வன்முறை கள் குறித்து ஐநா பாதுகாப்பு மன்ற உறுப்பு நாடுகள் இன்று விவாதிக்கவிருப்பதாக பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் கூறினார். ரோஹிங்யா மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு ஐநா அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித் துள்ளார்.
படகு மூலம் மியன்மார்-பங்ளாதேஷ் எல்லையைக் கடந்த ரோஹிங்யா அகதிகளில் ஒருவரான இந்த மாது கரைக்கு பத்திரமாக வந்துசேர்ந்தார். மியன்மாரில் நீடிக்கும் சண்டைக்குப் பயந்து அன்றாடம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் வெளியேறி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்