அடுத்து வரவிருக்கும் தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தைச் செயல்படுத்துவதற்கான ஏலக் குத் தகையை எஸ்எம்ஆர்டி வென்றுள் ளது. அதன் போட்டி நிறுவன மான எஸ்பிஎஸ் டிரான்சிட்டைக் காட்டிலும் 30 விழுக்காடு குறை வாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஏலக்குத்தகைத் தொகையைக் குறிப்பிட்டிருந்தது. மேலும், பணிகளில் அதிக தரத்தையும் அது தெரிவித்திருந் தது. இந்த ஒன்பதாண்டு குத்தகைக் கான ஏலத்தொகை $1.7 பில்லியன் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று பிற்பகலில் தெரிவித்தது. குறிப்பாக, எம்எம்ஆர்டியின் பரிந்துரைப்பு, முன்கூட்டி கண் டறிதல், நம்பகத்தன்மை ஆகிய வற்றை மையமாகக் கொண்டிருந்த தாக ஆணையம் கூறியுள் ளது. அத்துடன், வாடிக்கையாளருக் கான சேவைப் பயிற்சி உள்ளிட்ட வலுவான பணியாளர் மேம்பாட்டுத் திட்டங்களையும் சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகளையும் எஸ்எம் ஆர்டி தனது உத்தேசப் பரிந்துரைப் பில் சேர்த்திருந்தது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் திட்டத்தில் இடம்பெறக்கூடிய ஒரு ரயில் நிலையத்தின் மாதிரி படம் வரைபடக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவானது. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்