மாணவர்கள் உடல் பருமன் கூடுகிறது; சீருடை அளவு பெரிதாகிறது

சிங்கப்பூர் மாணவர்களிடையே உடல் பருமன் கூடிவருவதன் காரணமாக பள்ளிக்கூடச் சீருடை அளவு பெரிதாகி வருகிறது. இந்தத் தொழில்துறையில் 50 ஆண்டு காலமாக இருந்து வரும் ஷங்காய் ஸ்கூல் யுனிஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி டோரிஸ் இயோ, "நம்முடைய மாணவர்கள் அளவில் பெருத்து வருகிறார்கள். இப்போது அவர்களுக்குத் தோதாக உடைகளைப் பெரிதாக தைக்க வேண்டியிருக்கிறது," என்று கூறினார். குறிப்பாக கால்சட்டைகளைப் பெரிதாகத் தைக்க வேண்டியிருக்கிறது என்றார் அவர். சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களிடையே உடல்பருமன் விகிதம் அதிகமாகி வருகிறது. 2000ஆம் ஆண்டில் 10% ஆக இருந்த அந்த விகிதம், 2014ல் 12% ஆகியது. 10 பிள்ளைகளில் ஏழு பிள்ளைகள் தங்களுடைய ஏழாவது வயதில் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்கள். அவர்கள் வளரவளர அப்படியேதான் இருப்பார்கள் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!