ராணுவ முகாம்களில் கைபேசி: அமைச்சர் இங் விளக்கம்

சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம் களிலும் கட்டடங்களிலும் சேவையாளர்களுக்கு அதிக நீக்குப் போக்கையும் அதேநேரத்தில் பாதுகாப்பையும் சமநிலைப் படுத்தும் நோக்கத்தில் பாது காப்பிடங்களை வகைப்படுத்தும் நடைமுறை நற்பலன் தந்துள்ளது. அதனால் பாதுகாப்பிற்குப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்து இருக்கிறார். ராணுவ முகாம்களில் 2016 மார்ச்சில் நவீன கைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கை தளர்த்தப்பட்டது முதல் இந்த வாய்ப்பை சிங்கப்பூர் ஆயுதப்படை படை வீரர்கள் எத்தனை பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று டாக்டர் லீ பீ வா கேட்டிருந்தார். பச்சை, சிவப்பு மண்டல முகாம்களில் பணியாற்றும் வீரர்களில் 10%க்கும் குறைந்த வர்கள் தங்கள் கைபேசி படச் சாதனத்தை அணைத்துவிடு கிறார்கள். பெரும்பாலானவர்கள் பச்சை மண்டலங்களில் செயல் படுவதும் சிவப்பு மண்டலங் களுக்குள் செல்வதற்கு முன்பாக தங்கள் கைபேசிகளைப் பாதுகாப்பு பெட்டகத்தில் வீரர்கள் வைத்து விடுவதும் இதற்குக் காரணம். சில சேவையாளர்கள் புகைப் படச்சாதனம் இல்லாத கைபேசியைப் பயன்படுத்து கிறார்கள் என்றார் அமைச்சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!