பாடம் கற்றுத் தரும் ஆசிரியரையே மாணவன் ஒருவன் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் இந்தியா வின் ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஜஜ்ஜர் மாவட்டம், பகதூர்கரில் இருக்கும் ஹர்தயால் பொதுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், அப்பள்ளி யில் கணித ஆசிரியராகப் பணி புரியும் திரு ரவீந்தரை வெட்டிய அந்த சம்பவம் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. திரு ரவீந்தர் விடைத்தாள் களைத் திருத்திக்கொண்டிருந்த நேரம் பார்த்து, தனது பையில் இருந்து அரிவாள் ஒன்றை உருவிய அம்மாணவன், பின்னால் இருந்து அவரை வெட்டுவதை அந்தக் காணொளி காட்டுகிறது. அப் போது வகுப்பறையில் வேறு எவரும் இல்லை.
தாக்குதலில் இருந்து தப்பிக்க வகுப்பறையைவிட்டு திரு ரவீந்தர் ஓடியபோதும் அந்த மாணவன் விடாது துரத்தி அவரை வெட்டி னான். இன்னொரு ஆசிரியர் வந்து தடுத்த பிறகே அவன் வெட்டுவதை நிறுத்தினான். தாக்குதலில் ஈடுபட்ட மாண வனையும் அவனுக்கு ஆயுதம் வழங்கியதாக இன்னொரு மாணவனையும் போலிசார் கைது செய்துள்ளதாக போலிஸ் அதிகாரி ஹிமான்ஷு கார்க் தெரிவித்தார். பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் அந்த இருவரையும் திரு ரவீந்தர் திட்டி யதாகக் கூறப்படுகிறது.