நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழக மருத்துவ மாண வர்கள் வருங்காலத்தில் மெய் நிகர் ஆசிரியர் ஒருவரின் உதவியைப் பெறுவார்கள். அப்பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியன் மருத்துவப் பள்ளியில் பயிலும் மாணவர் களில் ஒவ்வொருவருக்கும் தோதாக அந்த மெய்நிகர் ஆசிரியர் போதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ மாணவர்களுக் காக இத்தகைய ஆசிரியரை உருவாக்க இந்தப் பல்கலைக் கழகம் ஐபிஎம் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுகிறது. மெய்நிகர் ஆசிரியர் கைய டக்க சாதனச் செயலி வடிவில் அல்லது கணினி செயல்திட்ட வடிவில் இருப்பார்.
அந்தச் செயலி ஒவ்வொரு மாணவரின் செயல்திறனையும் பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிட்டு எந்தெந்த துறையில் மாணவர்களுக்கு உதவி வேண்டுமோ அந்தந்த துறை யில் மணவர்களுக்கு உதவும் என்று இந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக, மாணவர் ஒரு தலைப்பு தொடர்பான தகவல்களை விரும்பும்போது அந்த ஆசிரியர் அவற்றை எடுத்துத் தந்து பலவற்றையும் போதித்து உதவுவார்.