குடும்ப மருத்துவத்திலும் பல் வேறு மருத்துவத் துறைகளில் ஆற்றல் பெறும் வகையிலும் பயிற்சி பெற கூடுதல் மருத்துவக் கல்வி இடங்களைச் சுகாதார அமைச்சு அதிகரிக்கிறது. மூப் படையும் சமூகம், மனிதவளப் பற்றாக்குறை ஆகியவற்றால் குடும்ப மருத்துவத்தில் நிபுணத் துவம் பெற சிங்கப்பூரில் உள்ள பல இளம் மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. "நோயாளி, முழுமையான பராமரிப்பு ஆகியவற்றை மைய மாகக் கொண்ட சிகிச்சையை வழங்குவதில் பல்வேறு மருத் துவத் துறைகளில் ஆற்றல் மிக்க மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்," என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல மருத்துவத் துறைகளில் ஆற்றல் கொண்ட மருத்துவர் களின் நிலையை உயர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் இளம் மருத்துவர் களைப் பல மருத்துவத் துறை களில் ஆற்றல் பெற ஊக்கு விப்பது குறித்தும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் டேனி யல் கோ கேள்வி கேட்டிருந்தார். தற்போதைய மருத்துவ அதி காரிகளும் பொது மருத்துவர் களும் குடும்ப மருத்துவத்தில் பயிற்சி பெற சுகாதார அமைச்சு நிதி உதவி வழங்குவதாக டாக்டர் லாம் பதிலளித்தார். தனியார் பொது மருத்துவர்கள் நடத்தும் குடும்ப மருத்துவ மருந்தகங்களுக்குச் சுகாதார அமைச்சு ஆதரவு வழங்குவதாக அவர் கூறினார். அதுமட்டுமல் லாது, சமூக சுகாதார நிலையங் களுக்கு நிதி உதவி வழங்கப் படுவதாக அவர் தெரிவித்தார்.