பாலித் தீவின் அகுங் எரிமலை யின் சீற்றத்தைக் கணிக்க முடி யாமல் இருப்பதால் அத்தீவுக் கான சுற்றுலாப் பயணங்களை ஒத்திவைக்கும்படி சிங்கப்பூரர் களுக்கு உள்துறை அமைச்சு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இந்தோனீசிய அதிகாரிகள் இன்னமும் எரிமலைக்கான எச் சரிக்கை நிலையை உச்சத்தில் வைத்துள்ளதை நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அமைச்சு சுட்டிக் காட்டியது. "அகுங் எரிமலையின் நிலை யை கணிக்க முடியவில்லை. எரி மலையிலிருந்து கிளம்பும் சாம்ப லால் மீண்டும் விமான நிலையம் மூட நேரிடலாம். "குறுகிய காலத்திற்குள்ளாக வே பயணத்துக்கு இடையூறுகள் ஏற்படலாம்.
"பாலியில் நிலைமை மேம்படும் வரை அங்கு பயணம் மேற்கொள் வதை ஒத்திவைக்கும்படி தொடர்ந்து சிங்கப்பூரர்களிடம் கேட்டுக் கொள்ளப்படும்," என்று அறிக்கை குறிப்பிட்டது. "நவம்பர் 27ஆம் தேதிக்குப் பிறகு உள்துறை அமைச்சின் நெருக்கடிகால குழு, பாலித் தீவின் அனைத்துலக விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டது. எரிமலை குமுறலுக்குப் பிறகு விமான நிலையம் மூடப் பட்டதால் பாதிக்கப்பட்ட சிங்கப் பூரர்களுக்கு தூதர் நிலையில் உதவிகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளுடனும் விமான நிறு வனங்களுடனும் சேர்ந்து செயல் பட்டு வருகிறோம். "மேலும் நவம்பர் 29ஆம் தேதி விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டபோது அங்கு சிக்கித் தவித்த சிங்கப்பூரர்கள் நாடு திரும்புவதற்காக விமான நிறுவனங்கள் சிறப்பு சேவை களை வழங்கி வருகின்றன," என்று அமைச்சு தெரிவித்தது.