ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு

நேஷனல் ஜியாகிரஃபிக்' புகைப் பட போட்டியில் 11,000 படைப்பு களைப் பின்னுக்குத் தள்ளி சிங் கப்பூர் புகைப்படக்காரர் வாகை சூடியுள்ளார். ஜெயபிரகாஷ் ஜோகீ போஜன் என்னும் அவர், இந்த ஆண்டின் சிறந்த 'நேஷ னல் ஜியாகிரஃபிக் நேச்சர் ஃபோட்டோகிராஃபர்' விருதை வென்றுள்ளார். இதனை நேஷ னல் ஜியாகிரஃபிக் சஞ்சிகை தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளது. ஆற்று நீரில் நிற்கும் ஓராங் ஊத்தான் எனப்படும் மனித குரங்கை படம் எடுத்த விதமே அவர் விருதை வெல்வதற்குக் காரணம். 'ஃபேஸ் டு ஃபேஸ் இன் எ ரிவர் இன் போர்னியோ' எனத் தலைப்பிட்டு அப்படத்தை அவர் அனுப்பி இருந்தார்.

அவ ரைப்போலவே உலகம் முழுவதும் இருந்த 11,000 படைப்புகள் போட்டிக்கு அனுப்பி வைக்கப் பட்டன. ஆசியாவில் அழிவை நோக்கிய விலங்குகள் தொடர் பான புத்தகப் பணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈடுபட்டிருந்த போது இந்தப் புகைப்படத்தை இந்தோனீசியாவின் போர்னி யோவிலுள்ள ஆற்றுப் பகுதியில் எடுத்ததாக ஜெயபிரகாஷ், 41, நேற்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

வெற்றியைப் பெற்றுத் தந்த புகைப்படம். மரம் ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டு தம்மைப் பார்த்த மனிதக் குரங்கை எதிரே இருந்த மற்றொரு மரத்தின் பின்னாலிருந்து இந்தப் படத்தை எடுத்ததாக ஜெயபிரகாஷ் தெரிவித்தார். படம்: ஜெயபிரகாஷ் ஜோகீ போஜன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!