கூட்டத்தினுள் கார் புகுந்து 19 பேர் காயம்; இருவர் கைது

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் கூட்டத் திற்குள் கார் புகுந்ததில் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபல மான ஃபிளிண்டர்ஸ், எலிசபெத் ஸ்திரீட் களின் சந்திப்பில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே வெள்ளை நிற சுசுகி கார் ஒன்று மோதியதாக போலிசார் தெரிவித்தார். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாக அந்த காரின் ஓட்டுநரையும் இன்னோர் ஆடவரையும் போலிசார் கைது செய்தனர். இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதாக விக்டோரியா போலிஸ் ஆணையர் ரசல் பேரட் தெரிவித்தார். "வேண்டுமென்றே இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. சம்பவத்திற்கு என்ன காரணம் என இப்போதே கூற முடியாது. விசாரணை நடந்து வருகிறது," என்று அவர் சொன்னார்.

கிறிஸ்மஸ் திருநாள் நெருங்குவதால் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் பாதசாரிகள் மீது காரை ஓட்டிப் பலருக்குக் காயம் விளைவித்த செயல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய போலிசார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற சுசுகி கார் இறுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்றின்மீது மோதி நின்றது (இடது படம்). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!