வேலூர்: வகுப்பறைக்குச் செல்லா மல் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டித்த தால், ஆவேசமடைந்த பள்ளி மாணவன், தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மாணவர்களை நல்வழிப்படுத்தும் கல்விமுறையே தற்போதைய அவசியத் தேவை என பாமக இளையரணித் தலை வர் அன்புமணி உள்ளிட்ட பலர் வலியுறுத்தி உள்ளனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூ ரில் செயல்பட்டு வரும் அரசு நிதி யுதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகி றார் பாபு (வயது 56).
நேற்று பள்ளி வழக்கம்போல் இயங்கிய நிலையில், அனைத்து வகுப்பறைகளுக்கும் நேரில் சென்று அவர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது 11ஆம் வகுப்பைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற மாணவன், தன் வகுப்பறை யில் இல்லாமல் காலியாக உள்ள மற்றொரு வகுப்பறையில் மேலும் நான்கு மாணவர்களுடன் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார். தலைமை ஆசிரியர் வருவதைக் கண்ட மற்ற மாணவர்கள் அங்கி ருந்து ஓட்டம் பிடிக்க, ஹரிஹரன் மட்டும் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தலைமை ஆசிரி யர் ஹரிஹரனை கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திர மடைந்த அம்மாணவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்தினான்.
இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் பாபு சுருண்டு விழ, பள்ளியின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து தப்பி ஓடிய ஹரிஹரன், பின்னர் கைதாகியுள்ளான். இந்நிலையில், ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக அன்புமணி எம்பி கவலை தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் சீர்திருத்தங் களைச் செய்ய தமிழக ஆட்சியாளர் கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலி யுறுத்தியுள்ளார். பள்ளிகளில் நீதிபோதனை, விளையாட்டு, யோகா ஆகிய வற்றைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.