பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம் பாட்டம், ஆடுபுலி ஆட்டம் என்று தமிழர் பாரம்பரியத்தின் பல விதமான கூறுகளை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள இளையர்களுக்கு அண்மையில் வாய்ப்பு கிட்டியது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற தமிழ்மொழி கற்றல் விழாவில், தொடக்கநிலை ஐந்து, உயர்நிலை இரண்டு ஆகிய வற்றில் பயிலும் மாணவர்கள் இந்த நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு தமிழ்க் கலாசாரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டனர். விழாவில் நடத்தப்பட்ட மொத்தம் 12 நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் பழமையான கிராமியக் கலைகள், தற்காப்புக் கலைகள், விளையாட்டுகள் ஆகியவற்றைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற தமிழ்மொழி கற்றல் திருவிழாவில் கோலாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள். படம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், செய்தி: சுதாஸகி ராமன்