இந்தியத் திடல்தட வீரருக்குத் தடை

புதுடெல்லி: 'மெல்டோனியம்' என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைத் தனது அறையில் வைத்திருந்த காரணத்திற்காக இந்தியத் திடல்தட வீரரான ஜித்தின் பாலுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் ஜித்தின் பால் போட்டியிட்டு வந்தார். அவர் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மைய வளாகத்தில் இருக்கும் அறையில் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான 'மெல்டோனியம்' அவரது அறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்புச் சோதனை மையத்தில் இது உறுதி செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!