அமைச்சர் ஜெயகுமார்: எச் ராஜாவுக்குச் சிறை உறுதி

சென்னை: தமிழ் மொழியை அழிப் பதற்காகவே திராவிடம் என்ற சொல்லை ஈ.வெ.ராமசாமி கொண்டுவந்தார் என்றும் தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என அவர் பேசியதாகவும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரி வித்துள்ளார். இப்படி தவறான தகவல் கொடுத்து மக்களைத் திசைமாற்றி, வன்முறைக் கலாசாரத்தை உரு வாக்க நினைப்பவர்கள் சிறைக்குப் போவது உறுதி என்று தமிழக அமைச்சர் ஜெயகுமார் கூறினார். "மலிவான விளம்பரத்துக்காக, இந்த மாதிரி கூற்றுகளைச் சொல் லக்கூடாது. இதை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். "தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்த செயலை யும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக்கொள்ளாது. அவர் யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் சரி, கைதுசெய்ய வேண்டிய நபர் தான்," என்றார் அமைச்சர். "ஏற்கெனவே எச்.ராஜா வருத் தம் தெரிவித்தார். இப்போது மீண் டும் தேவையில்லாமல் பேசுகிறார். அவர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மீன்வளத்துறை அமைச்சர் திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!