‘அதோ அந்த பறவை போல’

தனது விவாகரத்துக்குப் பிறகு வீறு கொண்டு எழுந்து நிற்கும் அமலா பால், சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். அவர் தற்பொழுது 'அதோ அந்தப் பறவை போல' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இடம்பெற்ற உணர்சிகரமான பாடலாக அமைந்த 'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்' பாடலின் முதல் வரியைத் தலைப்பாகக் கொண்ட இந்தப் படத்தில் கதாநாயகியை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரம் ஏற்றுள்ளார் அமலாபால்.

நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் 'அதோ அந்தப் பறவை போல' படத்தின் முதல் பார்வை சுவரொட்டியை, அமலா பாலின் நெருங்கிய தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். காஜல் தன் டுவிட்டர் பக்கத்தில் 'பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால்' என்று குறிப்பிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். கே.ஆர்.வினோத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக இருக்கிறது 'அதோ அந்தப் பறவைப் போல'.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!