வன்முறையால் ஏற்பட்ட கறை அகல வேண்டும்

ஞாயிறு 25.3.2018

இலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க நாடு தழுவிய அளவில் அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அந் நாட்டிலுள்ள சமூக பிளவின் ஆழத்தை வெளிப்படுத்தியது. 2009ஆம் ஆண்டு முடி வுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பல்லாண்டுகளாக நடைபெற்ற பிரிவினை வாதப் போருக்குப் பின் கடும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் எடுத்திருப்பது இதுவே முதல் முறை.

தற்போதைய கலவரம் இலங்கையின் மத்திய வட்டாரமான கண்டியில் தொடங்கினா லும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாட் டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கலவரத்தில் மூவர் உயிரிழந்த துடன் பல நூறு கடைகள் அழிக்கப்பட்ட நிலையில், கலவரத்தை அடக்க கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட் டாயம் அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்டது.

இலங்கை மக்களிடையே பிரிவினையை விதைத்த விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து வெகுநாட்களாகியும் அங்கு இன்னமும் இனக் கலவரம் நீடிப்பது வருத்த மளிக்கும் ஒன்று. அங்கு தற்பொழுது அவசர கால நிலை மீட்டுக்கொள்ளப்பட்டு வழக்க நிலைக்கு நாடு திரும்பியுள்ள போதிலும் கலவரத்துக்கு முன்பிருந்த நிலைக்கு திரும் புவது மட்டுமே சரியாக இராது. உலகின் பல சமயங்களைக் கொண்ட மற்ற சமூகங் களைப் போல, இலங்கையும் நாட்டில் இனங்க ளுக்கு இடையே நிலவும் உறவுகளை ஆழ மான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

இலங்கையில் அண்மையில் வெடித்த கலவரம் சாலையில் ஒரு சிங்கள ஆடவர் முஸ்லிம்களால் தாக்கப்பட்டு பின்னர் அவர் உயிரிழந்ததால் ஏற்பட்டது.

முழுமையாகப் படிப்பதற்கு epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!