இர்ஷாத் முஹம்மது
உலகளவில் பரவலாக பயன்படுத் தப்பட்டு வரும் சமூக ஊடகங்களில் மிகப் பிரபலமான ஒன்று ஃபேஸ்புக். 2004ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட ஃபேஸ்புக், கடந்த 14 ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி கண்டு இன்று ஏறக் குறைய 2.2 பில்லியன் மக்கள் அதைப் பயன்படுத்துவதாக சென்ற ஆண்டு இறுதியில் நடத் தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சுமார் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர் களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து சென்ற வாரம் முதல் ஃபேஸ்புக் நிறுவனம் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு திக்குமுக்காடிய நிலையில் உள்ளது. இதன் தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனரும் தலைமை நிர்வாகி யுமான மார்க் ஸக்கர்பர்க் கடந்த வியாழக்கிழமை பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்தத் தகவல் திருட்டு 2015ஆம் ஆண்டு முதல் நடந்துவந்துள்ளதாகவும் குறிப்பாக லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் அரசியல் தகவல் நிறுவனம் திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு அதன் மூலம் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற டோனல்ட் டிரம்ப்புக்கு உதவியதாகவும் கூறப் படுகிறது.
கோப்புப்படம்: ஏஎஃப்பி