தெம்பனிசில் இருக்கும் காப்பி கடை ஒன்றில் கன்னமிட்டு நுழைந்து $400 பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டதன் பேரில் பதின்ம வயதினர் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வயது 16 மற்றும் 17. தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் இருக்கும் ஒரு காப்பி கடையில் இரவு நேரத்தில் கன்னமிட்டு திருடப்பட்ட சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தத் திருட்டு பற்றி புகார் வந்ததையடுத்து போலிஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். போலிஸ் படச் சாதனங்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். 17 வயது நபர், அங் மோ கியோ அவென்யூ 1ல் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். மற்றொருவர் சீமெய் அவென்யூவில் திங்கட்கிழமை கைதானார். இரவு நேரத்தில் கன்னமிட்டு திருடிய குற்றவாளிக்கு 14 ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.
காப்பி கடையில் கன்னமிட்டு திருட்டு; பதின்ம வயதினர் இருவர் கைது
11 Apr 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2018 08:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!