காப்பி கடையில் கன்னமிட்டு திருட்டு; பதின்ம வயதினர் இருவர் கைது

தெம்பனிசில் இருக்கும் காப்பி கடை ஒன்றில் கன்னமிட்டு நுழைந்து $400 பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டதன் பேரில் பதின்ம வயதினர் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வயது 16 மற்றும் 17. தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் இருக்கும் ஒரு காப்பி கடையில் இரவு நேரத்தில் கன்னமிட்டு திருடப்பட்ட சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தத் திருட்டு பற்றி புகார் வந்ததையடுத்து போலிஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். போலிஸ் படச் சாதனங்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். 17 வயது நபர், அங் மோ கியோ அவென்யூ 1ல் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். மற்றொருவர் சீமெய் அவென்யூவில் திங்கட்கிழமை கைதானார். இரவு நேரத்தில் கன்னமிட்டு திருடிய குற்றவாளிக்கு 14 ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!