பொறியியல் நிறுவனம் ஒன்று வேலையிட மரணம் தொடர்பில் தனக்கு எதி ரான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ததை அடுத்து, அதற்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள் ளது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி, 'ஸ்டர்லிங் இன்ஜினி யரிங்' நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள், பார்ட்லி ரோட் டில் எஃகால் செய்யப்பட்ட நகரும் இரும்புச் சட்டம் ஒன்றை பொருத்திக்கொ ண்டிருந்தபோது அந்த அசம்பாவிதம் நடந்தது. 1,500 கிலோகிராம் எடை கொண்ட அந்தச் சட்டம், 41 வயது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் மீது விழுந்ததை அடுத்து அவர் மாண்டார்.
அந்த ஊழியர், தமது நண்பர்க ளால் 'கொரிம்' என்று அழைக்கப் பட்டதாகவும் அவருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருப்ப தாகவும் அறியப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 18ல் அரசு நீதிமன்றம், அந்த நிறுவனத் திற்கு $280,000 அபராதம் விதித் தது. வேலையிட, பாதுகாப்புச் சுகா தாரச் சட்டம், ஊழியர்களின் பாது காப்பை உறுதி செய்யும் நடவடிக் கைகளை எடுக்கத் தவறியதற்காக அந்த தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பையடுத்து மேல்முறையீடு செய்த நிறுவனம், இரும்புச் சட்டத் தின் வடிவமைப்பே விபத்துக்குக் காரணம் என்றும் அந்த வடிவ மைப்பு தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கூறியது.
நிறுவனம் மீதான அபராதத்தை அதிகரிக்க அரசாங்க வழக்குரைஞர் மேல் முறையீடு செய்திருந்தார். ஏப்ரல் 9ஆம் தேதி அந்த இரண்டு மேல் முறையீடுகளும் நீதிபதி அய்டிட் அப்துல்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. வேலையிட பாதுகாப்பை உறுதி செய்வது நிறுவனத்தின் பொறுப்பு என்பதை நீதிபதி நிலைநாட்டினார். இரும்புச் சட்டத்தின் வடிவ மைப்பை நிறுவனம் மாற்ற முடியா விட்டாலும் அதனைப் பொருத்தும் போது, ஆபத்துகளை ஆராயவும் பாதுகாப்புத் தரநிலைகளை நிறைவு செய்யவும் நிறுவனம் தவறியது. அதன் பேரில், நிறுவனத்தின் மேல் முறையீட்டை உயர் நீதிமன் றம் நிராகரித்து, அரசு தரப்புக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. நிறுவனத்தின் மீதான அப ராதம் $330,000க்கு அதிகரிக்கப் பட்டதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.