வேலை தேடுவோருக்கான தேசிய இணையவாசல் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. அதிநவீனத் தொழில்நுட்பத் தைக் கொண்டு வேலை தேடுவோ ரின் திறன்கள் வேலைகளுக்குப் பொருத்தமானதா என்று முதலா ளிகள் அறிந்துகொள்ளலாம். வேலை தேடுவோர் அரசாங்கத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற் றுக்கொண்டிருந்தால் அதையும் முதலாளிகள் தெரிந்து கொள்ள புதிய தொழில்நுட்பம் வழிசெய் கிறது. 'மைகெரியர்ஸ்ஃபியூச்சர்.எஸ்ஜி' (My CareersFutures.sg) என்ற இ ணை ய வா ச லை சி ங் க ப் பூ ர் ஊழியரணி அமைப்பு, அரசாங்க தொழில் நுட்ப அமைப்பான 'கவ் டெ க் ' ஆகியவை இணைந்து நிறுவின. தற்போதைய வேலை வங்கி (ஜோப்ஸ்பேங்க்) தளத்துக்குப் பதிலாக புதிய இணைய வாசல் செயல் படும்.
இவ்வாண்டின் இறுதிக்குள் முதலாளிகள் வேலைகளை இத் தளத்தில் பதிவேற்ற வழிசெய்வது நோக்கம் என்றது சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு. காலியாக உள்ள வேலைகள் பற்றி முதலாளிகள் தங்கள் 'ஜோப்ஸ்பேங்' தளத்தில் பதிவு செய்வார்கள். அந்தப் பதிவுகள் MyCareerFuture.sg என்ற தளத்தில் காண்பிக்கப்படும். 2017ன் கடைசி மூன்று மாதங் களில் புதிய தளத்திற்கான சோதனை செய்யப்பட்டது. அதில் 100 பயனாளர்கள் இணையவாச லைப் பயன்படுத்திப் பார்த்தனர்.
வாழ்க்கைத்தொழில் வழிகாட்டிகள் (ஊதா நிற ஆடையில் உள்ளோர்) வேலை வாய்ப்புகளைத் தேடி வருபவர்களுக்கு 'மைகெரியர்ஸ் ஃபியூச்சர்.எஸ்ஜி' இணைய வாசலைப் பயன்படுத்தும் முறையைக் கற்றுக் கொடுக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்