ஒவ்வொன்றும் 300 கிலோ எடையுள்ள 9,000க்கும் மேற்பட்ட கண்ணாடித் துண்டுகளை ஜுவல் சாங்கி விமான நிலையக் கட்டட முகப்பில் பொருத்தும் பணிகள் இவ்வாண்டு ஜூன் மாதவாக்கில் நிறைவுபெறும். ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளில் 75% முடிந்துவிட்டதால் திட்டமிட்டபடி 2019ல் அக்கட்டடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. சாங்கி விமான நிலைய குழுமம், கேப்பிட்டலேண்ட் நிறுவ னங்களின் கூட்டு முயற்சியில் அக்கட்டடம் உருவாகி வருகிறது. பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்ட 9,000க்கும் மேற்பட்ட கண் ணாடித் துண்டுகள், கிட்டத்தட்ட 18,000 எஃகு உத்தரங்கள், ஆறா யிரத்திற்கும் மேற்பட்ட கணுக்கள் ஆகியவற்றைக் கொண்டு ஜுவல் கட்டடத்தின் முகப்பு அமைக்கப் படுகிறது.
கண்ணாடித் துண்டுகள் ஒரே அளவில் இல்லாமல் ஒவ்வொன்றும் வெவ்வேறான அளவுகளில் இருப் பதால் முகப்பை அமைப்பது சிரம மான பணி எனக் கூறப்படுகிறது. முகப்பு முற்றிலுமாக அமைக்கப் பட்டபின் அதன் மொத்த எடை 6,000 டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என்றார் திட்டத் தலை வரான அஷித் ஆல்வா. ஒளியைக் கடத்தும் தன்மை கொண்ட அந்தக் கண்ணாடித் துண்டுகளால் ஜுவல் கட்டடம் ஜொலிக்கும். அத்துடன், வெப்பத் தையும் குறைத்து கட்டடத்தின் உட்புறம் குளுகுளுவென இருப் பதை உறுதிசெய்யும். ஒலித் தடுப்பானாகச் செயல் படும் வகையில் 16 மில்லிமீட்டர் காற்று இடைவெளியுடன் அந்தக் கண்ணாடித் துண்டுகள் வடிவ மைக்கப்பட்டுள்ளதால் விமானங் களால் எழும் ஓசை கட்டடத்திற்குள் குறைந்த அளவிலேயே கேட்கும்.