கால்நடை மருத்துவமனை ஒன் றின் வெளியே நான்கு சிறிய குரங்குகள் கைவிடப்பட்டு காணப் பட்டன. பெரும்பாலும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் வகையைச் சேர்ந்தவை இக்குரங்குகள் என நம்பப்படுகிறது. ஆதரவற்றுக் காணப்பட்ட அக்குரங்குகளில் ஒன்று பிறந்து சில மாதங்களே ஆன குட்டி. சாப்பாடு அடைக்கப் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் டப்பாவில் அந்தக் குட்டிக் குரங்கு அடைத்து வைக்கப்பட்டு காற்றோட்டத் திற்காக அந்த டப்பாவில் துவா ரங்கள் இடப்பட்டு இருந்தன.
மற்ற மூன்று குரங்குகளும் பெரும் பாலும் பறவைகளுக்குப் பயன் படுத்தப்படும் கூட்டிலும் செல்லப் பிராணி தூக்குப் பெட்டியிலும் அடைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கறுப்புநிறக் குரங்குகள் நேற்று முன்தினம் காலை பரி தாபத்திற்குரிய நிலையில் மீட்கப் பட்டதாக விலங்கு நல ஆய்வு மற்றும் கல்விச் சங்கத்தின் (ஏக் கர்ஸ்) துணைத் தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் தெரிவித்தார். அவை சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு கைவிடப் பட்டவை என்பது தெளிவாகிறது. பராமரிக்க இயலாததால் உரிமை யாளர் இவற்றைக் கைவிட்டுச் சென்றிருப்பதற்கான சாத்தியம் உண்டு என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித் தாளிடம் தெரிவித்தார். சிராங்கூன் ரோட்டில் உள்ள விலங்கு மீட்பு கால்நடை பரிந் துரைப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் இதுகுறித்து ஏக்கர்ஸ் தகவல் அளித்ததாகக் கூறப்பட்டது.
பிறந்து சில மாதங்களே ஆன சிறிய குரங்கு உணவு டப்பாவில் அடைக்கப்பட்டிருந்தது. ஏக்கர்ஸின் துணை தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் அதனை மீட்டார். படம்: ஏக்கர்ஸ்