தினகரன் வெற்றி: உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசியலில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் சுயேச்சையாகக் களமிறங்கினார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மதுசூதனனும் திமுக சார்பில் மருது கணே‌ஷும் களமிறக்கப்பட்டனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தினகரன்.

இடைத்தேர்தலில் வாக் காளர்களுக்குப் பெரும் தொகை விநியோகிக்கப் பட்டதாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் புகார் எழுப்பின. இந்நிலையில் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட எம்.எல். ரவி என்பவர் தினகரன் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்களைச் செவி மடுத்த நீதிபதி தினகரன் பெற்ற வெற்றி செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளார். ரவியின் மனு நீதிமன் றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!