உரிம தேர்வில் தேர்ச்சியடையாத 5,300 தனியார் ஓட்டுநர்கள்

தனியார் வாடகைக் கார் உரிமத்திற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ள கிட்டத்தட்ட 5,3-00 ஓட்டுநர்கள், இன்னும் அதற்கென தேர்ச்சி பெறவில்லை. உரிமங்கள் குறித்த புதிய விதிமுறைத் திட்டம் அடுத்த மாதம் நடப்புக்கு வரும்போது அவர்கள், தனியார் வாடகை சேவை வழங்க முடியாது. மேலும் 17,700 ஓட்டுநர்கள், உரிமத்திற்கான பயிற்சி வகுப்பில் சேராததால் அவர்களும் வாட கைச் சேவைகள் வழங்குவதை நிறுத்தவேண்டும். நிலப் போக்குவரத்து ஆணை யம் இந்தத் தகவல்களைத் தனது அறிக்கையில் நேற்று வெளி யிட்டது.

பயிற்சியை முடித்துக்கொள்ள அந்த 23,000 ஓட்டுநர்களுக்கு ஓர் ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது, அடுத்த மாதம் நிறைவு பெறும. மொத்தத்தில் 42,900 ஓட்டுநர் களுக்கு அந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் களில் 19,900 பேர், அந்த 10 மணி நேர பயிற்சி வகுப்பில் சேர்ந்து தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அந்தத் தேர்வுக்கான தேர்ச்சி விகிதம் 70% என்றது ஆணையம். சுகாதாரம், பாதுகாப்பு போன்ற தலைப்புகளைச் சார்ந்த கேள் விகள், தேர்விலிருந்து நீக்கப் பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னர் தெரிவித்தது. அந்த கேள்விகளுக்கும் தங்களது வேலைக்கும் தொடர் பில்லை என்று ஓட்டுநர்கள் கருதினர். ஆயினும், அந்தத் தலைப்புகள் தொடர்ந்து பாடத் திட்டத்தில் இடம்பெறுகின்றன.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!