போலிஸ் மனு நிராகரிப்பு; சமூக ஆர்வலர் விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர்: சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சிட்டி காசிமை தடுப்புக்காவலில் வைத்து விசார ணை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி காவல் துறையினர் மனுத் தாக்கல் செய் திருந்தனர். ஆனால் காஜாங் நீதிமன்றம் அந்த மனுவை ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து சிட்டி காசிம் விடுவிக்கப்பட்டார். சிட்டியை நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்க போலி சார் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சிட்டி காசிமுக் காக வாதாடிய 12 வழக்கறிஞர் களில் ஒருவரான அம்பிகா சீனி வாசன், "சிட்டியைத் தடுப்புக் காவலில் வைக்க அடிப்படைக் காரணம்கூட இல்லை," என்றார். பெட்டாலிங் ஜெயா நாடாளு மன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, "சிட்டியைக் கைது செய்தது நியாயமற்ற செயல்," என்றார்.<ப்> தற்போதைய 'புதிய மலே சியா'வில் இதுபோன்ற சம்ப வங்கள் நடைபெறக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

சமூக ஆர்வலர் சிட்டிக்காக நீதிமன்றத்தில் வாதாடிய 12 வழக்கறிஞர்களில் ஒருவரான அம்பிகா சீனிவாசன், சிட்டியைக் கைது செய்ய காரணம் இல்லை என்றார். படங்கள்: த ஸ்டார் ஆன்லைன்

மேலும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!