நீதிமன்ற அதிகாரிகளாக மோசடி செய்வோர் மீது உச்ச நீதிமன்றம் போலிசாரிடம் புகார் செய்ய உள்ளது. பொதுமக்களிடம் இது குறித்த புகார்களுக்கு அடுத்து நீதிமன்றம் அந்த முடிவை எடுத்துள்ளதாக உச்ச நீதி மன்றப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப் புகள் தொடர்பில் பொதுமக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றம் புகார் செய்யவிருப்பதாக பேச்சாளர் கூறி னார்.
"இத்தகைய சம்பவங்களை நாங்கள் கடுமையாகக் கருதுகிறோம். நீதிமன்றத்திலி ருந்து அழைக்கிறோம் என்ற கூறும் அந்த அழைப்புகள் பொய் என்றும் அவை நிரா கரிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள், தகவல் கொடுத்தவர்களிடம் கூறினோம்," என்றார் அந்தப் பேச்சாளர். தகவலைக் கொடுத்தவருக்கு, குரல் பதிவு செய்யப்பட்ட அழைப்பு ஒன்று வந்த தாக 'ரெடிட்' என்ற இணைய கலந்து ரையாடல் தளத்தின் பயனீட்டாளர் ஒருவர் குறிப்பிட்டார். அழைப்பு, சிங்கப்பூர் உயர் நீதி மன் றத்திடமிருந்து வருவதாகவும், '9' என்ற எண்ணை அழுத்தச் சொல்லவும், பதிவு செய்யப்பட்ட குரல் கேட்டது.