துவாஸ் கடற்பகுதிக்குள் நுழைய முயன்ற பத்து ஆடவர்கள் கைது

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பேரில் 10 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துவாசுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில், படகு வழியாகச் சென்று கொண்டிருந்த ஆடவர்களைக் கரையோரக் காவல் படையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை சுமார் 7.30 மணிக்கு, சிங்கப்பூரை நோக்கி விரைவாகச் சென்று கொண்டிருந்த அந்தப் படகைக் கரையோரக் காவல் படை அதிகாரிகள் கண்டனர். அந்த ஆடவர்கள் 20 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப் பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்டெடுக்கப்பட்ட துவாஸ் நிலப்பகுதியின் கரைக்கு அருகே அந்தப் படகு சென்று, சிங்கப்பூருக்கு சொந்தமான நீர்ப்பகுதியைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. ஜூரோங் போலிஸ் பிரிவு, குர்க்கா படை, சிறப்புச் செயலாக்கப்படை ஆகியவற்றின் துணையுடன் அந்த பத்து நபர்கள் பிடிக்கப்பட்டனர். கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் நுழையும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதம் வரையிலான சிறையும் குறைந்தது மூன்று பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!