மாறுபட்ட கதைக்களங்களில் நடிக்க விரும்பும் கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதுப்படம் 'கடைக்குட்டி சிங்கம்'. சாயிஷா நாயகியாக நடிக்கிறார். இது விவசாயத்தின் மேன்மையை மேலும் உயர்த்திப்பிடிக்கும் படமாம். இந்தக் கதையில் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதே பாண்டிராஜின் திட்டமாக இருந்ததாம். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அவரால் கால்‌ஷீட் ஒதுக்க முடியாமல் போக, கார்த்தியை அணுகினாராம் பாண்டிராஜ். 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற விறுவிறுப்பான படத்தில் நடித்து முடித்திருந்த கார்த்தியும் அந்தச் சமயத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறொரு கதைக்காகக் காத்திருந்த நேரம் அது.

விவசாயப் பின்புலத்தில் பாண்டிராஜ் சொன்ன கதை கார்த்திக்கு ரொம்பவே பிடித்துப் போனது. "வெறும் அதிரடி, அடிதடிப் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் பிறகு அதிலிருந்து மீள்வது சிரமமாகிவிடும். ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதேபோன்ற கதைகளையே நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். எனவே அடுத்தடுத்து மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்யவேண்டும். அதனால்தான் விவசாயம் சார்ந்த கதைக்களத்தை தேர்வு செய்தேன்," என நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் கார்த்தி.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!